மும்பை: பாலிவுட் சினிமாவின் பிரபல முகங்களில் ஒருவர் கரண் ஜோஹர். அவர் இப்போது ட்விட்டர் தளத்தில் இருந்து வெளியேறி உள்ளார். அது குறித்து அவரே தனது கடைசி ட்வீட் மூலம் விளக்கம் கொடுத்துள்ளார்.
50 வயதான கரண் ஜோஹர் இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், காஸ்ட்யூம் டிசைனர், தொலைக்காட்சி தொகுப்பாளர், நடிகர் என பன்முகத் திறன் கொண்டவர். ஷாருக்கானின் வெற்றிப்படமான ‘குச் குச் ஹோத்தா ஹை’ படம் தான் இவர் இயக்கிய முதல் படம். அதேநேரத்தில் தொடர்ந்து பாப்புலர் படங்களை தயாரித்தும் வருகிறார்.
தற்போது அவர் ட்விட்டர் தளத்தில் இருந்து விலகி உள்ளார். “அதிகளவில் பாசிட்டிவ் எனர்ஜிகளை விரும்புகிறேன். அதன் முதல் படியாக ட்விட்டர் தளத்தில் இருந்து விலகுகிறேன். குட் பை” என அவர் தெரிவித்துள்ளார்.
அண்மைக் காலமாக பாலிவுட் சினிமாவுக்கு எதிராக ட்விட்டரில் புறக்கணிப்பு முழக்கங்கள் ஹாஷ்டேக் வடிவில் முன்னெடுக்கப்படுகின்றன. அதன் காரணமாக அவர் வெளியேறி இருக்கலாம் எனத் தெரிகிறது. இப்போது அவர் தனது ட்விட்டர் கணக்கை டெலிட் செய்துள்ளார் எனத் தெரிகிறது.
முக்கிய செய்திகள்
சுற்றுலா
3 mins ago
சினிமா
8 mins ago
இந்தியா
29 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago