ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் ஷாரூக்கான் நடிக்கவுள்ளார்.
அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ஷாரூக்கான். அவரது ரெட் சில்லீஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு புனேவில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. படப்பிடிப்பு தொடங்கிய வேளையில் தான் ஷாரூக்கானின் மகன் ஆர்யன்கான் போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டார். இதனால், இப்படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. ஆர்யன் கான் ஜாமீனில் வெளியில் வந்தவுடன் மீண்டும் தொடங்கப்பட்ட படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.
இந்தப் படத்தில் ஷாரூக்கானுக்கு நாயகியாக நயன்தாரா நடித்து வருகிறார்.
இப்படம் தவிர்த்து சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் என்ற படத்தில் ஷாரூக்கான் கவனம் செலுத்தி வருகிறார். இதில் ஜான் ஆபிரகாம், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த இரண்டு படங்களையும் முடித்து விட்டு ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஒரு படத்தில் ஷாரூக்கான் நடிக்கவுள்ளார். இப்படத்தில் விக்கி கவுஷன், டாப்ஸி, பொமான் ஹிரானி உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
ராஜ்குமார் ஹிரானி இந்தியில் ‘முன்னாபாய் எம்பிபிஎஸ்’, ‘3 இடியட்ஸ்’, ‘பிகே’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
27 mins ago
தமிழகம்
17 mins ago
சினிமா
25 mins ago
தமிழகம்
47 mins ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
48 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
க்ரைம்
2 hours ago
தமிழகம்
2 hours ago