நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கரோனா தொற்று உறுதி 

By செய்திப்பிரிவு

நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், கர்நாடகா, பஞ்சாப், தமிழகம், கேரளா, டெல்லி, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.

மத்திய சுகாதாரத் துறையின் நேற்றைய புள்ளிவிவரத்தின்படி நாடு முழுவதும் ஒரே நாளில் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களாக பாலிவுட் பிரபலங்கள் பலரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆமிர்கான், மாதவன், சஞ்சய் லீலா பான்சாலி, ஆலியா பட் உள்ளிட்ட பலருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் அக்‌ஷய் குமார் தனக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

இன்று அதிகாலை எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை உங்கள் அனைவரிடமும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி உடனடியாக என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன். தேவையான மருத்துவ பராமரிப்பையும் பெற்று வருகிறேன். என்னோடு தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை பரிசோதித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். விரைவில் இதிலிருந்து மீண்டு வருகிறேன்.

இவ்வாறு அக்‌ஷ்ய குமார் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

35 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்