நடிகை பூனம் பாண்டேவுக்கும் அவரது காதலர் சாம் பாம்பேவுக்கும் திருமணம் முடிந்துள்ளது. திருமண புகைப்படங்களை பூனம் பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கவர்ச்சியான புகைப்படங்கள், காணொலிகள், அதிரடியான சவால்கள் என சமூக ஊடகத்தில் அவ்வப்போது பரபரப்பைக் கிளப்புபவர் பூனம் பாண்டே. இந்தியில் 'நாஷா' என்கிற திரைப்படம் மூலமாக அறிமுகமானாலும் திரைப்படங்களைத் தாண்டி இணையத்தில் இவர் உருவாக்கும் சலசலப்பினால் தான் தொடர்ந்து ஊடக வெளிச்சத்தில் இருந்து வருகிறார்.
கடந்த இரண்டு வருடங்களாக சாம் பாம்பே என்பவரை பூனம் பாண்டே காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் அவ்வப்போது அவரவர் பக்கங்களில் பகிரப்பட்டுள்ளன. இவர்களுக்குக் கடந்த ஜூலை மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
இந்நிலையில் இவர்களுக்குத் திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருமண புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் பூனம் பாண்டே, "இன்னும் ஏழு ஜென்மங்களும் உன்னுடன் வாழும் வாழ்க்கையை எதிர்நோக்கியுள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார். இதற்கு சாம், "கண்டிப்பாக திருமதி பாம்பே" என்று பதிலளித்துள்ளார்.
இவர்களின் திருமணத்துக்கு ரசிகர்கள், பிரபலங்கள், நட்சத்திரங்கள் எனப் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
உலகம்
7 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
8 hours ago
சினிமா
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago