தோனி பயமில்லாத வீரர்: சல்மான் கான் புகழாரம்

By செய்திப்பிரிவு

இந்திய கிரிக்கெட் வீரர் தோனியை பயமில்லாத வீரர் என்று பாலிவுட் நடிகர் சல்மான் கான் பாராட்டியுள்ளார்.

சல்மான் கான் 'பாரத்' படத்தைத் தொடர்ந்து பிரபுதேவா இயக்கத்தில் உருவாங்கியுள்ள 'தபங் 3' படத்தில் நடித்திருக்கிறார். டிசம்பர் 20-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வுகளில் சல்மான் கான், சோனாக்‌ஷி சின்ஹா, சுதீப் ஆகிய நடிகர்கள் இறங்கியுள்ளனர்.

அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையே நடந்த ஒருநாள் போட்டியை முன்னிட்டு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்சியில் ’தபங் 3 ’ படக்குழு கலந்துகொண்டது.

இதில் சல்மான் கான் தனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர் குறித்துக் கூறும்போது, “ எனக்குத் தனிப்பட்ட முறையில் ஜாதவ்வை தெரியும். ஆனால் எனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர் தோனி. அவர் பயமில்லாத கிரிக்கெட் வீரர்” என்றார்.

கன்னட நடிகர் சுதீப் கூறும்போது, “அனில் கும்ப்ளே, ரோஹித் சர்மாவைப் பிடிக்கும்” என்று பதிலளித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

க்ரைம்

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

க்ரைம்

7 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்