இந்திய கிரிக்கெட் வீரர் தோனியை பயமில்லாத வீரர் என்று பாலிவுட் நடிகர் சல்மான் கான் பாராட்டியுள்ளார்.
சல்மான் கான் 'பாரத்' படத்தைத் தொடர்ந்து பிரபுதேவா இயக்கத்தில் உருவாங்கியுள்ள 'தபங் 3' படத்தில் நடித்திருக்கிறார். டிசம்பர் 20-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வுகளில் சல்மான் கான், சோனாக்ஷி சின்ஹா, சுதீப் ஆகிய நடிகர்கள் இறங்கியுள்ளனர்.
அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையே நடந்த ஒருநாள் போட்டியை முன்னிட்டு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்சியில் ’தபங் 3 ’ படக்குழு கலந்துகொண்டது.
இதில் சல்மான் கான் தனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர் குறித்துக் கூறும்போது, “ எனக்குத் தனிப்பட்ட முறையில் ஜாதவ்வை தெரியும். ஆனால் எனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர் தோனி. அவர் பயமில்லாத கிரிக்கெட் வீரர்” என்றார்.
கன்னட நடிகர் சுதீப் கூறும்போது, “அனில் கும்ப்ளே, ரோஹித் சர்மாவைப் பிடிக்கும்” என்று பதிலளித்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
சினிமா
3 hours ago
விளையாட்டு
4 hours ago
வணிகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
க்ரைம்
6 hours ago
சுற்றுச்சூழல்
6 hours ago
க்ரைம்
7 hours ago
இந்தியா
7 hours ago
சினிமா
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago