ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அனுராக் காஷ்யப்

By செய்திப்பிரிவு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்திப் படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் இயக்குநர் அனுராக் காஷ்யப் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

'கத்தி' படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக இந்தி படம் ஒன்றை இயக்க இருப்பதாக அறிவித்தார். பெண்கள் சம்பந்தப்பட்ட இக்கதையில் நாயகியாக சோனாக்‌ஷி சின்ஹா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். அனிருத் இசையமைக்க இருக்கிறார்.

இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க, இந்தி திரையுலகின் முன்னணி இயக்குநர் அனுராக் காஷ்யப் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். முதற்கட்டப் பணிகள் இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.

அருள்நிதி இயக்கத்தில் விமர்சகர்களால் பாராட்டப்பட்ட 'மெளனகுரு' படத்தின் இந்தி ரீமேக்கை தான் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கவிருக்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இப்படத்தை முழுக்க பெண்கள் பின்னணியாக திரைக்கதையை மாற்றி இருக்கிறாராம் முருகதாஸ்.

'மெளனகுரு' படத்தில் ஜான் விஜய் நடித்த வில்லன் பாத்திரத்தில் அனுராக் காஷ்யப் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை ஏ.ஆர்.முருகதாஸ் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்