கங்கணாவை ஆதரிக்கிறேன் என்று ஹ்ரித்திக் ரோஷனின் தங்கை சுனைனா அளித்துள்ள பேட்டி பாலிவுட் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹ்ரித்திக் ரோஷனுக்கும், கங்கணா ரணாவத்துக்கும் இடையே கடந்த சில வருடங்களாகவே பிரச்சினை நிலவி வருகிறது. தாங்கள் இருவரும் காதலித்து வந்ததாக கங்கணா கூறி வந்தார். அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் சொன்னார். ஆனால் கங்கணா கூறுவது பொய் என்று ஹ்ரித்திக் மறுத்தார். தொடர்ந்து இது குறித்து போலீஸ் விசாரணை வரை பிரச்சினை வளர்ந்தது. கங்கணா கூறியது போல எந்த சாட்சியும் இல்லை என்று போலீஸ் தரப்பும் சொன்னது.
தொடர்ந்து வரும் இந்தப் பிரச்சினையில் அவ்வப்போது கங்கணாவின் சகோதரி மட்டும் ஹ்ரித்திக் தரப்பைச் சீண்டுமாறு ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார். தற்போது ஹ்ரித்திக் ரோஷனின் சகோதரி சுனைனா, கங்கணாவுக்கு ஆதரவாகப் பேட்டி கொடுத்துள்ளார்.
"நான் பெண் சக்தியை ஆதரிக்கிறேன். இன்று கங்கணா வை ஆதரிக்கிறேன். அவர் ஒரு பெண். அவருக்கு உதவி கேட்க எல்லா உரிமையும் உண்டு. எனக்கும் உண்டு. அவருக்கு நியாயம் வேண்டும், எனக்கும் வேண்டும்.
என் அண்ணனுக்கும், கங்கணாவுக்கும் இடையே என்ன நடந்தது என்று தெரியாது. ஆனால் நெருப்பில்லாமல் புகையாது. முதலில் நான் கங்கணாவுடன் நல்ல நட்பில் இருந்தேன். பின் எங்களுக்குள் தொடர்பின்றிப் போனது.
எனக்கு என்றுமே கங்கணாவைப் பிடிக்கும். ஆனால் இரண்டு வருடங்கள் முன்பு அவர் தேசிய விருது வென்ற போது நான் அவருக்குச் செய்தி அனுப்பினேன். ஆனால் அவர் என்னுடன் நட்பாக இருக்காதே. குடும்ப நிலை காரணமாக என்னுடன் தொடர்பிலிருக்காதே என்று கூறிவிட்டார். எனக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. யாரும் என்னிடம் சொல்லவில்லை.
நானே என் குடும்பத்தினரிடம் கேட்டேன். என் அண்ணனிடம் ஆதாரம் இருந்தால் அதை வெளியில் கொண்டு வரட்டுமே. ஏன் அதை மறைக்கிறார்?" என்று சுனைனா பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் தான் கங்கணாவின் சகோதரி ரங்கோலி சுனைனா பற்றி பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
40 secs ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago