ஊர்வஷி ரவுடேலாவை பின்னால் தட்டி சர்ச்சையில் சிக்கியுள்ளார் போனி கபூர். இதற்கு ஊர்வஷி ரவுடேலா விளக்கம் அளித்துள்ளார்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தியில் பல்வேறு படங்களைத் தயாரித்துள்ளார். தற்போது தமிழில் அஜித் நடித்து வரும் 'நேர்கொண்ட பார்வை' படத்தைத் தயாரித்து வருகிறார். ஆகஸ்ட் 10-ம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது.
மும்பையில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில், பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர். இதில் தயாரிப்பாளர் போனி கபூரும் கலந்து கொண்டார். அப்போது, போனி கபூருடன் இணைந்து நடிகை ஊர்வஷி ரவுடேலா புகைப்படக் கலைஞர்களுக்கு போஸ் கொடுத்தார்.
அந்த வேளையில் போனி கபூர் ஊர்வஷி ரவுடேலாவின் பின்னால் தட்டினார். அதற்குப் பிறகு ஊர்வஷியும் போனி கபூருடன் ஏதோ பேசியிருப்பது போல் வீடியோ வெளியானது. இணையத்தில் இந்த வீடியோவால் கடும் எதிர்வினைகளைச் சந்தித்து வருகிறார் போனி கபூர். மகள் வயதுடைய பெண்ணிடம் போனி கபூர் இப்படி நடந்து கொள்வது சரியா? என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
மேலும், இந்த வீடியோவைப் பகிர்ந்து பலரும் போனி கபூரைக் கிண்டல் செய்தும் வருகிறார்கள். இந்த விவகாரம் சர்ச்சையானதைத் தொடர்ந்து ஊர்வஷி ரவுடேலா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ''மரியாதைக்குரிய போனிகபூருடன் நான் இருக்கும் ஒரு வீடியோவை வைத்து சமூக ஊடகத்தில் பரவி வரும் கிண்டல்களை இன்று காலை பார்த்து நான் கடும் அதிர்ச்சியடைந்தேன். அவர் ஒரு உண்மையான ஜென்டில்மேன்.
ஒருவரின் நற்பெயரைக் கெடுக்கும் விஷயங்களைப் பதிவிட சமூக ஊடகத்தில் இருப்பவர்கள் துளியும் யோசிப்பதில்லை என்பது எனக்கு மிகுந்த வருத்தத்தை, சோகத்தைத் தருகிறது. இந்தக் கிண்டல்களை நிறுத்துங்கள் என அனைவரையும் வேண்டி கேட்டுக் கொள்கிறேன். நான் உண்மையில் போனி கபூரை மதிக்கிறேன். அவருடன், அவரது கண்ணியத்துக்கு துணை நிற்கிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
சினிமா
3 hours ago
விளையாட்டு
4 hours ago
வணிகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
க்ரைம்
6 hours ago
சுற்றுச்சூழல்
6 hours ago
க்ரைம்
6 hours ago
இந்தியா
6 hours ago
சினிமா
8 hours ago
கருத்துப் பேழை
7 hours ago