'எதற்கும் துணிந்தவன்'  படத்தின் ட்ரெய்லர் வெளியானது

By செய்திப்பிரிவு

சென்னை: சூர்யா நடித்துள்ள 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. இந்த ட்ரெய்லர் வெளியான சில நிமிடங்களிலேயே ஏராளமானோர் பார்வையிட்டுள்ளனர்.

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எதற்கும் துணிந்தவன்'. இந்தப் படத்தின் நாயகியாக ப்ரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், வினய், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ரத்னவேலு, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இப்படத்தின் பாடல்களும், டீசரும் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்த நிலையில் 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் ட்ரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டது. சுமார் 2.10 நிமிடம் ஓடக்கூடிய இந்த ட்ரெய்லரில், அதிரடி ஆக்சன் காட்சிகளில் ஆக்ரோஷமாகவும், பாடல் காட்சிகளில் இளமையாகவும் தோன்றுகிறார் சூர்யா. பிடிச்சிருந்தா லைக் பண்ணு, ஷேர் பண்ணு, கமெண்ட் பண்ணு என வினய் கூறுவதுடன் ட்ரெய்லர் முடிகிறது. இந்த ட்ரெய்லர் வெளியான சில நிமிடங்களிலேயே ஏராளமானோர் பார்வையிட்டுள்ளனர்.

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் மார்ச் மாதம் 10-ஆம் தேதி வெளியாகவுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பின் சூர்யா நடித்துள்ள 'எதற்கும் துணிந்தவன்' படம் திரையரங்குகளில் ரிலீசாக இருப்பதால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்