முன்னணி ஸ்மார்ட்போன் இடத்தை பிடிக்க நோக்கியா தீவிரம்

By செய்திப்பிரிவு

நோக்கியா பிராண்டை வாங்கியுள்ள ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட் போன் பிராண்டாக நோக்கியாவை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

ஆரம்ப காலத்தில் இந்தியாவில் முன்னணி பிராண்டாக நோக்கியா திகழ்ந்தது. 2012-ம் ஆண்டுக்குப் பிறகு சரிவைச் சந்தித்தது. இரட்டை சிம், டச் ஸ்கிரீன் ஸ்மார்ட்போன்களின் வரவால் நோக்கியா பின்னடைவைச் சந்தித்தது. தவிர உள்நாட்டு தயாரிப்பு நிறுவனங்களான மைக்ரோமேக்ஸ் மற்றும் சாம்சங் ஆகியவற்றோடு போட்டியிட முடியாத நிலைக்கு நோக்கியா தள்ளப்பட்டது. இதனால் இதன் சந்தை 2012-ல் 10 சதவீதத்துக்கும் கீழாக சரிந்தது.

மேலும் ஓப்போ, ஜியோமி உள்ளிட்ட சீன நிறுவன தயாரிப்புகளாலும் நோக்கியாவின் சந்தை கடுமையான பின்னடைவைச் சந்தித்தது.

நோக்கியா பிராண்டை வாங்கியுள்ள ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் தற்போது மீண்டும் இந்திய சந்தையில் புதிய தயாரிப்புகளை படிப்படியாக களமிறக்கி வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளுக்குள் முன்னணி ஸ்மார்ட்போனாக இதை உருவாக்குவதே திட்டம் என்று நிறுவனத்தின் துணைத் தலைவர் அஜய் மேத்தா தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

தொழில்நுட்பம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

மேலும்