தனியார் வங்கியான ஹெச்டிஎப்சி சந்தை மதிப்பு அடிப்படையில் இரண்டாவது பெரிய நிறுவனமாக நேற்று உயர்ந்தது. இரண்டாம் இடத்தில் இருந்த டிசிஎஸ் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு டிசிஎஸ் முதல் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய வர்த்தகத்தின் இடையே ஹெச்டிஎப்சி வங்கியின் பங்கு 0.93 சதவீதம் உயர்ந்து 1,840 ரூபாய்க்கு ஒரு பங்கு வர்த்தகமானது. இது 52 வார உச்சபட்ச விலையாகும். இந்த ஆண்டில் ஹெச்டிஎப்சி வங்கி மட்டும் 53 சதவீதம் உயர்ந்திருக்கிறது. ஆனால் டிசிஎஸ் பங்கு 5 சதவீதம் மட்டுமே உயர்ந்திருக்கிறது. நேற்றைய வர்த்தகத்தின் இடையே ஹெச்டிஎப்சி வங்கியின் சந்தை மதிப்பு ரூ.4.73 லட்சம் கோடியாக இருந்தது. இதே நேரத்தில் டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.4.72 லட்சம் கோடியாக இருந்தது. ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது முதல் இடத்தில் இருக்கிறது. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.5.35 லட்சம் கோடியாகும்.
ஆனால் நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் டிசிஎஸ் மீண்டும் இரண்டாம் இடத்தை பிடித்தது.டிசிஎஸ் மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி ஆகிய இரு நிறுவனங்களுக்கு இடையே சந்தை மதிப்பு அடிப்படையில் சுமார் ரூ.2,500 கோடி வித்தியாசம் இருக்கிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
54 mins ago
இந்தியா
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
3 hours ago
வணிகம்
11 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago
சுற்றுலா
4 hours ago
கல்வி
3 hours ago