மல்லையா காசோலை வழக்கு மே 25-ல் தீர்ப்பு

By செய்திப்பிரிவு

காசோலை மோசடி வழக்கில் விஜய் மல்லையாவுக்கு மே 25-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று ஹைதராபாத் நகர நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. ஜிஎம்ஆர் ஹைதராபாத் ஏர்போர்ட் இன்டர்நே ஷனல் நிறுவனம் விஜய் மல்லை யாவுக்கு எதிராக இரு காசோலை மோசடி வழக்குகளை தொடர்ந்தது.

நேற்று இந்த வழக்கில் தண்டனை விவரம் வெளியாவதாக இருந்தது. ஆனால் மல்லையா நேரில் ஆஜராகாததை அடுத்து, தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டதாக ஜிஎம்ஆர் நிறுவனத்தின் அசோக் ரெட்டி தெரிவித்தார்.

விஜய் மல்லையாவின் இரண்டு 50 லட்ச ரூபாய் காசோலை மூலம் பணம் கிடைக்கவில்லை என்பதால் தொடரப்பட்ட வழக்கில், அவர் குற்றவாளி என்று ஏற்கெனவே நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

விஜய்மல்லையா தற்போது இங்கிலாந்தில் இருக்கிறார். தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை சில நாட்களுக்கு முன்பு ராஜினாமா செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 mins ago

சினிமா

10 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

தமிழகம்

8 mins ago

சினிமா

26 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

20 mins ago

சினிமா

31 mins ago

சினிமா

34 mins ago

வலைஞர் பக்கம்

38 mins ago

சினிமா

43 mins ago

சினிமா

48 mins ago

மேலும்