வங்கிகளில் கடன் வாங்கச் செல்லும் போது வாடிக்கையாளர்களிடம் வங்கி அலுவலர்கள் சொல்லும் சில வங்கி மொழிகள் பல புரிவதே இல்லை. வங்கிளில் அவை தினமும் பயன்படுத்தப்படும் மொழிதான் என்றாலும், அதன் நிஜ அர்த்தம் வாடிக்கையாளர்களுக்கு புரியாததால், அவை அவர்களை குழப்பி பயம் கொள்ள செய்து விடுகின்றன. வாடிக்கையாளர்களும் கடன் வாங்கப் போகும் அவசரம் அல்லது அவசியத்தில் அந்த வங்கி மொழிகள் புரியாமலேயே தலையாட்டிக் கொண்டிருப்பார்கள். அப்படி வங்கிகளில் பயன்படுத்தப்படும் பிரத்தியேக மொழிகளைப் பற்றி விளக்கம் தருகிறார் எழுத்தாளர், பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் பொதுமேலாளர் "குறள் இனிது" சோம.வீரப்பன்.
மார்ஜின்: பொதுவாக வங்கிக்கு சென்று நாம் எந்த கடன் கேட்டாலும், அதில் உங்களுடைய மார்ஜின் எவ்வளவு என்று ஒரு கேள்வி கேட்கப்படும். அது என்ன மார்ஜின் என்று கேட்கிறீர்களா? பொதுவாக வெள்ளைத் தாள் ஒன்றில் ஏதாவது எழுதும் போது இடது மூலையில் கொஞ்சமாக விடப்படும் இடத்திற்கு "மார்ஜின்" என்று சொல்வார்கள். வங்கியில் சொல்லப்படும் மார்ஜினும் கிட்டத்தட்ட அதே அர்த்தத்தில் தான் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, வாடிக்கையாளர் வாங்கும் வங்கிக்கடனில் அவரது பங்குப்பணம் எவ்வளவு என்பதை குறிப்பதே மார்ஜின் எனப்படும். உதாரணமாக ஒருவர் வங்கியில் ரூ.10 லட்சம் கடன் கேட்கிறார் என்றால் வங்கி அவருக்கு ரூ.10 லட்சம் கடன் கொடுக்காது. அதில் கடன் வாங்குபவரின் மார்ஜின் எவ்வளவு என்று கேட்பார்கள் அல்லது 25 சதவீதம் மார்ஜின் வைத்துக்கொள்ளலாம் என்பார்கள். அதாவது ரூ.10 லட்சம் மதிப்புள்ள ஒரு பொருளை வாங்க வாடிக்கையாளர் கடன் கேட்கிறார் என்றால் அதில், வங்கி ரூ.7.5 லட்சம் மட்டுமே வழங்கும், ரூ.2.5 லட்சத்தை வாடிக்கையாளரின் பங்காக போடச் சொல்லும். மொத்தக் கடனில் வாடிக்கையாளர் செலுத்தும் பங்குப் பணமே மார்ஜின் எனப்படும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
47 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
10 hours ago
சினிமா
11 hours ago
இந்தியா
11 hours ago
தமிழகம்
12 hours ago