விஜய் மல்லையாவின் விமானம் ஜூன் 29-ல் ஏலம்

By செய்திப்பிரிவு

விஜய் மல்லையாவுக்கு சொந்தமான சொகுசு விமானத்தை ஏலம் விடப் போவதாக சேவை வரி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவாவில் உள்ள விஜய் மல்லையாவின் பங்களாவை வங்கிகள் பறிமுதல் செய்தது. இந்நிலையில் அடுத்ததாக விஜய் மல்லையாவின் சொகுசு விமானம் ஏலம் விடப்பட உள்ளது. இந்த சொகுசு விமானத்திற்கான ஏலம் மே மாதம் 12 மற்றும் 13 தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மாற்றம் செய்யப்பட்டு ஜூன் மாதம் 29 மற்றும் 30 தேதிகளில் நடத்த திட்டமிட்டிருக்கின்றனர்.

விஜய் மல்லையா வங்கிகளிடம் வாங்கிய 9,400 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாத நிலையில் வங்கிகள் அவரிடம் கடனை வசூலிக்க பல்வேறு முயற்சிகள் செய்து வருகிறது. தற்போது சேவை வரித்துறையினர் 500 கோடி ரூபாய் வரி பாக்கியை திரும்ப பெறுவதற்காக விஜய் மல்லையாவின் சொகுசு விமானத்தை கையகப்படுத்தியுள்ளது. இந்த சொகுசு விமானத்தை தற்போது ஏலத்தில் முடிவு செய்திருக்கிறது.

விஜய் மல்லையாவின் இந்த சொகுசு விமானம் சோபா, பெட், பார், குளியல் அறை என அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியது. 25 இருக்கைகளை கொண்ட இந்த விமானத்தின் வெளிப்புறத்தில் விஜய் மல்லையாவின் இரண்டு மகள்கள் மற்றும் மகன் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன.

இந்த விமானம் கடந்த மூன்று வருடமாக மும்பை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மிகவும் அழுக்கு படிந்த நிலையில் இந்த விமான காணப்படுகிறது. தற்போது விஜய் மல்லையா சொந்தமான பல உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

17 mins ago

வாழ்வியல்

49 mins ago

உலகம்

47 mins ago

தமிழகம்

57 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

க்ரைம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்