ஐடிசி நிறுவனம் மீண்டும் சிகரெட் உற்பத்தி செய்ய முடிவெடுத் திருக்கிறது.
சிகரெட் பாக்கெட்களில் 85 சதவீதம் அளவுக்கு எச்சரிக்கை வாசகங்கள் இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதார துறை உத்தர விட்டிருந்தது. இந்த உத்தரவு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருவதாகவும் கூறப்பட்டிருந்தது. முன்னதாக இந்த அளவு 20 சதவீதமாக மட்டுமே இருந்தது. இதனால் இந்த உத்தரவை அடுத்து புகையிலை நிறுவ னங்கள் தங்களது உற்பத்தியை நிறுத்தி இருந்தன. அரசின் புதிய உத்தரவு தெளிவற்றதாக இருப்பதால் ஏப்ரல் 1-ம் தேதி முதல் சிகரெட் உற்பத்தியை நிறுத்த ஐடிசி முடிவு செய்தது. உற்பத்தியை நிறுத்தினால் இந்த துறையில் தினமும் 350 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டமாகும்.
இது தொடர்பாக பல்வேறு நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்திருந்தன. இந்த வழக்கில் நிறுவனங்களுக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதால் உற்பத்தியை தொடங்க மீண்டும் ஐடிசி முடிவெடுத்திருக்கிறது. ஆனால் இது குறித்து மேலும் தகவல்களை தெரிவிக்க ஐடிசி நிறுவனம் மறுத்துவிட்டது. தவிர நீதிமன்றத்தில் வாதடியது மற்றும் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என எது குறித்தும் கருத்து கூற ஐடிசி நிறுவனம் மறுத்துவிட்டது. மேலும் எச்சரிக்கை வாசகங்களை எந்த அளவுக்கு அச்சடிக்கும் என்பது குறித்தும் தகவல் தெரிவிக்கவில்லை
இந்தியாவின் மொத்த புகையிலை சந்தை 1100 கோடி அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.73 ஆயிரம் கோடி). கடந்த 2014-15-ம் நிதி ஆண்டில் சிகரெட் விற்பனை மட்டும் 17,765 கோடி ரூபாய் ஆகும். ஐடிசி நிறுவனத்தின் மொத்த விற்பனையில் (ரூ.38,433) இது 46 சதவீதம்
முக்கிய செய்திகள்
வணிகம்
12 mins ago
தமிழகம்
58 mins ago
விளையாட்டு
1 hour ago
க்ரைம்
1 hour ago
சுற்றுச்சூழல்
2 hours ago
க்ரைம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
3 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
சுற்றுலா
3 hours ago
சினிமா
3 hours ago
இந்தியா
4 hours ago