சென்னை: இந்தியா கடந்த 2021 ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில், 114 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் 1,23,846 மெட்ரிக் டன்கள் அளவிலான வெள்ளரி மற்றும் பதப்படுத்தப்பட்ட ஊறுகாய் வெள்ளரி (கெர்கின்ஸ்) ஏற்றுமதி செய்து உலக அளவில் சாதனை படைத்துள்ளது.
இதுதொடர்பாக வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:உலகளவில் கடந்த நிதியாண்டில் ஊறுகாய் வெள்ளரி, விவசாய பதப்படுத்தப்பட்ட பொருட்களின் ஏற்றுமதியில் இந்தியா 200 மில்லியன் அமெரிக்க டாலர்களை கடந்துள்ளது. 2020-21 ஆம் ஆண்டில், 223 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான 2,23,515 மெட்ரிக் டன் வெள்ளரி மற்றும் கெர்கின்களை இந்தியா அனுப்பியுள்ளது.
வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் வர்த்தகத் துறையின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) உலக சந்தையில் தயாரிப்புகளை மேம்படுத்துதல் மற்றும் பதப்படுத்தலில் உணவுப் பாதுகாப்பு மேலாண்மை முறையைப் பின்பற்றுதல் ஆகியவற்றில் தொடர் முயற்சிகளை மேற்கொண்டது.
பதப்படுத்தப்பட்ட ஊறுகாய் வெள்ளரி இரண்டு வகைகளின் கீழ் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. வெள்ளரிகள் மற்றும் கெர்கின்கள், அவை வினிகர் அல்லது அசிட்டிக் அமிலத்தில் ஊற வைக்கப்பட்டு கெர்கின்களாக தயாரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன, அவை தற்காலிகமாக பாதுகாக்கப்படுகின்றன.இந்தியாவில், கடந்த 1990-களின் முற்பகுதியில்,கெர்கின் சாகுபடி, பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி கர்நாடகா மாநிலத்தில் தொடங்கியது, பின்னர் தமிழகம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கும் பரவியது. உலகளவில் கெர்கின் உற்பத்தியில் கிட்டத்தட்ட 15 சதவீதம் இந்தியாவில்தான் விளைகிறது.
இவை தற்போது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் , பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், தென் கொரியா, கனடா உள்ளிட்ட20 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கிராமப்புற வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும் கெர்கின் தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில், 65,000 ஏக்கரில் சுமார் 90,000 சிறு மற்றும் குறு விவசாயிகளால் ஒப்பந்த விவசாயத்தின் கீழ் கெர்கின் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.பதப்படுத்தப்பட்ட கெர்கின்கள் மொத்தமாக தொழில்துறை மூலப்பொருளாகவும், ஜாடிகளில் சாப்பிட தயாராகவும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்தியாவில் சுமார் 51 பெரிய நிறுவனங்கள் டிரம்ஸ் மற்றும் ரெடி-டு ஈட் நுகர்வோர் பொதிகளில் கெர்கின்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கின்றன.
பதப்படுத்தப்பட்ட காய்கறிகளின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதில் APEDA முக்கியப் பங்காற்றியுள்ளது. மேலும் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பதப்படுத்தப்பட்ட கெர்கின்களின் தரத்தை மேம்படுத்துதல், சர்வதேச சந்தையில் தயாரிப்புகளை மேம்படுத்துதல் மற்றும் பதப்படுத்தும் பிரிவுகளில் உணவு பாதுகாப்பு மேலாண்மை அமைப்புகளை செயல்படுத்துதல் ஆகியவற்றுக்கு நிதி உதவி அளித்து வருகிறது.
சராசரியாக, ஒரு கேர்கின் விவசாயி ஒரு ஏக்கருக்கு 4 மெட்ரிக் டன் உற்பத்தி செய்து, 40,000 ரூபாய் நிகர வருமானத்துடன் சுமார் 80,000 ரூபாய் சம்பாதிக்கிறார். கெர்கின் 90 நாள் பயிர் மற்றும் விவசாயிகள் ஆண்டுக்கு இரண்டு முறை சாகுபடி செய்த பயிர்களை எடுக்கிறார்கள்.
வெளிநாடுகளில் வாங்குபவர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இந்தியாவில் சர்வதேச தரத்தில் செயலாக்க ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன. அனைத்து கெர்கின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களும் ISO, BRC, IFS, FSSC 22000 சான்றளிக்கப்பட்டவை மற்றும் HACCP சான்றளிக்கப்பட்டவை அல்லது அனைத்து சான்றிதழ்களையும் பெற்றுள்ளன. APEDA ஆனது உற்பத்தியின் ஏற்றுமதி மதிப்பை அதிகரிக்க கெர்கின்களின் மதிப்பு கூட்டுதலிலும் கவனம் செலுத்துகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
56 mins ago
கருத்துப் பேழை
52 mins ago
சுற்றுலா
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
ஓடிடி களம்
36 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
14 mins ago