கோவிட்-19 தொடர்பான சவால்கள் இருந்த போதிலும், ஒரு குறிக்கோளின் அடிப்படையில் இயங்கிய, இந்திய ரயில்வே கடந்த ஆண்டு சரக்குப் போக்குவரத்தை விட இந்த ஆண்டு அதிக வருவாய் ஈட்டி குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.
ஆகஸ்ட் 19, 2020 அன்று சரக்கு ஏற்றுதல் 3.11 மில்லியன் டன்களாக இருந்தது, இது கடந்த ஆண்டு இதே தேதியை விட (2.97 மில்லியன் டன்) அதிகமாகும். ஆகஸ்ட் 19, 2020 அன்று இந்திய ரயில்வே 306.1 கோடி ரூபாய் சரக்கு ஏற்றுவதில் ஈட்டியது, இது கடந்த ஆண்டு இதே தேதியில் ஈட்டிய தொகையை விட 5.28 கோடி ரூபாய் அதிகமாகும் (300.82 Cr.).
ஆகஸ்ட் 2020-ம் ஆண்டில், ஆகஸ்ட் 19, 2020 வரை மொத்த சரக்கு ஏற்றுதல் 57.47 மில்லியன் டன்கள் ஆகும், இது கடந்த ஆண்டு இதே காலத்தை விட (53.65 மில்லியன் டன்) அதிகமாகும். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், இன்றைய தேதி வரை, அதாவது ஆகஸ்ட் 19, 2020 வரை இந்திய ரயில்வே 5461.21 கோடி ரூபாய் சரக்கு ஏற்றுவதில் ஈட்டியுள்ளது, இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட 25.9 கோடி ரூபாய் (5435.31 Cr) அதிகமாகும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
29 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
தமிழகம்
1 hour ago