தங்கம் விலை மீண்டும் உயர்வு; பவுனுக்கு ரூ.400 அதிகரிப்பு: வெள்ளி விலையும் உச்சம்

By செய்திப்பிரிவு


தங்கத்தின் விலை இன்று மாலையில் மீண்டும் உயர்ந்துள்ளது.

தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனர்.

பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. கரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலை ஏறுமுகமாக இருந்து வருகிறது.

இந்தநிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5351-ஆக உயர்ந்தது.

மாலையில் மீண்டும் தங்கம் விலை உயர்ந்தது. மாலை நேர நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.5374-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.42992க்கு விற்பனையானது.

இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் 45136 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 2.40 ரூபாய் உயர்ந்து 81.60 ரூபாய் ஆக விற்பனையாகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

55 mins ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

வணிகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்