1.84 ட்ரில்லியன் டாலர்கள் சந்தை மதிப்புடன் ஆப்பிள் நிறுவனம் உலகிலேயே மதிப்பு மிக்க நிறுவனமாக முன்னிலை வகிக்கிறது.
இதன் மூலம் பெட்ரோலிய ஜெயண்ட் நிறுவனமான சவுதியின் ஆரம்கோ நிறுவனத்தை ஆப்பிள் நிறுவனம் பின்னுக்குத் தள்ளியது.
இதனையடுத்து ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் அன்று 10.47% அதிகரித்து பாசிட்டிவ் ஆக முடிந்துள்ளது. சவுதி ஆரம்கோ நிறுவனத்தின் மார்க்கெட் மதிப்பு 1.76 ட்ரில்லியன் டாலர்களாகும்.
மார்ச்சில் கரோனா காரணமாக பின்னடைவைச் சந்தித்த ஆப்பிள் தற்போது மீண்டது. இந்த ஆண்டு மட்டும் ஆப்பில் நிறுவனப் பங்குகள் விலை 44% அதிகரித்ததாக சிஎன்பிசி நியூஸ் தெரிவிக்கிறது.
வலுவான ஆன்லைன் வர்த்தகம் தான் இதன் மீட்சிக்குக் காரணம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பொருளாதார நசிவு காலக்கட்டத்தில் ஆப்பிள் நிறுவனத்துக்கு இது பெரிய தூண்டுகோலாக, உத்வேகமாக அமைந்துள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 mins ago
சினிமா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
வணிகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
க்ரைம்
4 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago
க்ரைம்
4 hours ago
இந்தியா
4 hours ago
சினிமா
6 hours ago
கருத்துப் பேழை
5 hours ago