வாகன எரிபொருளாக ஹைட்ரஜன் சேர்க்கப்பட்ட இயற்கை எரிவாயு: மக்களிடம் கருத்து கேட்கிறது மத்திய அரசு

By செய்திப்பிரிவு

ஹைட்ரஜன் சேர்க்கப்பட்ட இயற்கை எரிவாயுவை வாகன எரிபொருளாகப் பயன்படுத்துவது தொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் பொதுமக்களிடம் கருத்துக் கேட்பை தொடங்கியுள்ளது.

ஹைட்ரஜன் சேர்க்கப்பட்ட இயற்கை எரிவாயுவை (சிஎன்ஜி) வாகன எரிபொருளாகப் பயன்படுத்துவது தொடர்பான 2020 ஜூலை 22-ந் தேதியிட்ட ஜிஎஸ்ஆர் 461(இ) அறிவிக்கை வாயிலாக, மத்திய மோட்டார் வாகன விதிமுறைகள் 1979-ல் திருத்தம் செய்வது குறித்து, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் பொதுமக்களிடமும் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினரிடமும் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கேட்டுள்ளது.

இது நமது நாட்டில், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற எரிபொருளை வாகனங்களுக்குப் பயன்படுத்துவதற்காக அமைச்சகம் எடுத்துள்ள மற்றொரு நடவடிக்கையாகும்.

இதுதொடர்பான தமது கருத்துக்களை, பொதுமக்கள் 30 நாட்களுக்குள், இணைச் செயலர், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், போக்குவரத்து வளாகம், நாடாளுமன்றத் தெரு, புதுடெல்லி110001 (மின்னஞ்சல் - jspb-morth@gov.in) என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

விளையாட்டு

26 mins ago

வணிகம்

38 mins ago

இந்தியா

40 mins ago

சினிமா

46 mins ago

ஓடிடி களம்

1 hour ago

கல்வி

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

மேலும்