சட்ட விரோதமாக சிகரெட் கடத்தல்; ரூ.72 கோடிக்கும் அதிகமான வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு

By செய்திப்பிரிவு

சட்ட விரோதமாக சிகரெட் கடத்தல் மூலம் ரூ.72 கோடிக்கும் அதிகமான வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கோட்டாவில் உள்ள தொழிற்சாலை மூலம் சிகரெட் கடத்தல் செய்து, வரி ஏய்ப்பும் செய்யப்பட்டிருப்பதை சரக்குகள் மற்றும் சேவை வரி புலனாய்வுக்கான தலைமை இயக்குனரகம் கண்டுபிடித்துள்ளது.

இது தொடர்பாக 2020 ஜூலை 17-ந் தேதி அன்று கோட்டா மற்றும் நகரில்(Nagaur) உள்ள தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், கிடங்குகள், ரகசிய அலுவலகங்கள், பயனாளிகளின் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சோதனைகளின் போது வரிகள் மற்றும் தீர்வைகள் செலுத்தாமல் சிகரெட் விநியோகித்திருப்பது தொடர்பான ஆவணங்களும், மின்னணு சாதனங்களும் கிடைத்தன. ஆரம்பகட்ட விசாரணையில், ரூ.72 கோடிக்கும் அதிகமான அளவில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

முடக்க காலத்தின் போதும், சிகரெட் விநியோகம் நடந்திருப்பது, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் தரவுகளிலிருந்து தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக ஜூலை 20-ம் தேதி அன்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் விசாரணை நடந்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்