தங்கம் விலை இன்றும் உயர்ந்துள்ளது.
தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனர்.
பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. கரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகிறன. இந்தநிலையில் இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.4546-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ.36368க்கு விற்பனையாகிறது.
இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 38160 கிராம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை 1.20 ரூபாய் உயர்ந்து 50.20ரூபாய்க்கு விற்பனையாகிறது.
முக்கிய செய்திகள்
வணிகம்
21 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
க்ரைம்
1 hour ago
சுற்றுச்சூழல்
2 hours ago
க்ரைம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
3 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
சுற்றுலா
3 hours ago
சினிமா
3 hours ago
இந்தியா
4 hours ago