பங்குச் சந்தையில் தொடர்ந்து சரிவு காணப்பட்டு வரும் நிலையில் பார்டிசிபேட்டரி நோட்ஸ் (பி-நோட்ஸ்) முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பிப்ரவரி மாத இறுதியில் பி-நோட்ஸ் முதலீடு ரூ.68,862 கோடியை தொட்டுள்ளது. தொடர்ந்து இரண்டாவது மாதமாக இதில் முதலீடு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பதிவு பெற்ற வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீட்டு நிறுவனங்கள் பி-நோட்ஸ்களை வெளியிடுகின்றன. அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கு வசதியாக இவை மேற்கொள்ளப்படுகின்றன.
இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய விரும்பும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பி-நோட்ஸ்களில் முதலீடு செய்வர். இதற்கு அவர்கள் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் உரிய விதிமுறைகள் அடிப்படையில் மட்டுமே முதலீடு செய்ய முடியும். இந்திய சந்தையில் பி-நோட்ஸ் மூலமான முதலீடு அதாவது ஈக்விடி, கடன் பத்திரங்கள், ஹைபிரிட் பத்திரங்கள், டெரிவேடிவ்களில் பிப்ரவரி மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு ரூ.68,862கோடி என்று செபி வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. ஜனவரி மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு ரூ.67,281 கோடியாகும்.
மொத்த முதலீட்டில் ஈக்விடியில் ரூ.53,902 கோடியும், ரூ.14,739கோடி கடன் பத்திரங்களிலும், ரூ.144 கோடி டெரிவேடிவ்ஸ்களிலும், ஹைபிரிட் செக்யூரிடிகளில் ரூ.77 கோடியும் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
சினிமா
5 hours ago
விளையாட்டு
6 hours ago
வணிகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
8 hours ago
க்ரைம்
8 hours ago
சுற்றுச்சூழல்
9 hours ago
க்ரைம்
9 hours ago
இந்தியா
9 hours ago
சினிமா
10 hours ago
கருத்துப் பேழை
10 hours ago