சென்செக்ஸ் 517 புள்ளிகள் உயர்வு

By பிடிஐ

சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் எப் அண்ட் ஓ முடிவுகள் காரணமாக பங்குச்சந்தைகள் உயர்ந்து முடிந்தன. அமெரிக்க வட்டி விகிதம் உயர்வு வரும் செப்டம்பரில் இருக்காது என்று அமெரிக்க மத்திய வங்கி சூசகமாக அறிவித்ததால் இந்திய பங்குச்சந்தை உயர்ந்தன.

சென்செக்ஸ் 517 புள்ளிகள் உயர்ந்து 26231 புள்ளியிலும், நிப்டி 157 புள்ளிகள் உயர்ந்து 7948 புள்ளியிலும் முடிவடைந்தன. அனைத்து துறை குறியீடுகளும் உயர்ந்து முடிந்தன. குறிப்பாக கன்ஸ்யூமர் டியுரபிள் குறியீடு 5.11 சதவீதம் உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து ரியால்டி குறியீடு 4.02 சதவீதம், ஹெல்த்கேர் குறியீடு 2.93%, ஆயில் அண்ட் கேஸ் குறியீடு 2.8 சதவீதமும் உயர்ந்து முடிந்தன.

இதுவரை சரிந்து வந்த சீனப் பங்குச்சந்தையும் நேற்று உயர்ந்து முடிந்தன. கடந்த ஆறு வர்த்தக தினங்களாக 20 சதவீத அளவுக்கு சரிந்த ஷாங்காய் காம்போசிட் குறியீடு நேற்று 5 சதவீதம் உயர்ந்து முடிந்தது. ஜப்பானின் நிக்கி ஒரு சதவீதம் உயர்ந்து முடிந்தது.

நேற்றைய வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பும் உயர்ந்து முடிந்தது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 19 பையா உயர்ந்தது.

நிப்டி பட்டியலில் ஹெச்டிஎப்சி (8.6%), கெய்ர்ன் இந்தியா (7.48%), வேதாந்தா 7.01 சதவீதம் உயர்ந்து முடிந்தன.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

கார்ட்டூன்

2 hours ago

இந்தியா

1 hour ago

வர்த்தக உலகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

உலகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

10 hours ago

சினிமா

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்