ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவன இயக்குனர் பதவியில் இருந்து அனில் அம்பானி உள்ளிட்ட 5 பேர் விலகி உள்ளனர்.
ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனத்தின் இயக்குநராக அனில் அம்பானி பதவியிலிருந்து விலகினார். இவருடன் இயக்குனர்களாக இருந்த சாயா விரானி, ரைனா கரானி, மஞ்சரி காக்கர் மற்றும் சுரேஷ் ரங்காச்சார் ஆகியோரும் பதவி விலகினார்கள்.
இந்த நிறுவனத்தில், நடப்பு நிதியாண்டிற்கான முதல் காலாண்டில் ரூ.366 கோடி இழப்பு ஏற்பட்டு இருந்தது. இந்நிலையில், நடப்பு நிதியாண்டிற்கான 2வது காலாண்டில் ரூ.30,142 கோடியாக இழப்பு உயர்ந்து உள்ளது. இது வோடபோன் ஐடியா நஷ்டத்துக்கு அடுத்த இடத்தில் பெருநஷ்ட பட்டியலில் உள்ளது.
இதுபற்றிய அறிக்கை வெளியான நிலையில், இயக்குனர் பதவியில் இருந்து விலகும் முடிவை அனில் அம்பானி உள்ளிட்ட 5 பேரும் எடுத்து உள்ளனர்.
கடந்த அக்டோபர் 4ந்தேதி, இந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மற்றும் இயக்குனர் பொறுப்பில் இருந்து வி. மணிகண்டன் விலகினார். இதனை அடுத்து செயல் இயக்குனர் மற்றும் தலைமை நிதி அதிகாரியாக டி. விஸ்வநாத் நியமிக்கப்பட்டார்.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் திவால் சட்டத்தின் கீழ் திவால் நோட்டீஸ் அளித்திருந்தது, தனது கடன்காரர்களுக்கு நிறுவனம் அளிக்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.47,000 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
1 min ago
தமிழகம்
9 mins ago
இந்தியா
12 mins ago
சினிமா
18 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
43 mins ago
ஓடிடி களம்
57 mins ago
க்ரைம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago