நாட்டின் சில்லரை பணவீக்கம் அக்டோபர் மாதத்தில் 4.62 சதவீதமாக உயர்ந்துள்ளது. உணவுப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக பணவீக்கம் அதிகரித்ததாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
நுகர்வோர் விலை குறியீட்டு (சிபிஐ) அடிப்படையிலான பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 3.99 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இது 3.38 சதவீதமாக இருந்தது. உணவுப் பொருட்களின் விலை 7.89 சதவீதஅளவுக்கு உயர்ந்துள்ளது.
செப்டம்பரில் விலை உயர்வு 5.11 சதவீத அளவுக்கு இருந்தது. ரிசர்வ் வங்கி பெரும்பாலும் நுகர்வோர் பணவீக்க அடிப்படையில்தான் தனது நிதிக் கொள்கையை வகுக்கிறது. பணவீக்க விகிதத்தை 4 சதவீதத்துக்குள் கட்டுக்குள் வைக்கவே ஆர்பிஐ விரும்புகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
27 mins ago
தமிழகம்
23 mins ago
இந்தியா
47 mins ago
இந்தியா
34 mins ago
இந்தியா
57 mins ago
விளையாட்டு
49 mins ago
இந்தியா
57 mins ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
3 hours ago
தமிழகம்
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago