ஆர்பிஐ வட்டி குறைப்பால் பொருளாதார வளர்ச்சி மேம்படும்: நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் கருத்து

By செய்திப்பிரிவு

புதுடெல்லி

ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதக் குறைப்பு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும். விரைவில் இந்தியா 8 சதவீத வளர்ச்சி கொண்ட நாடாக மாறும் என்று நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு தொடர்ந்து பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக ரிசர்வ் வங்கியும் தற்போது வட்டிக் குறைப்பை மேற்கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். ரிசர்வ் வங்கி தொடர்ந்து ஐந்தாவது முறையாக ரெப்போ விகிதத்தை நேற்று குறைத்தது. தற்போது ரெப்போ விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 5.15 சதவீதமாக உள்ளது. அதேபோல் நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி வீதம் 6.1 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்தது. இந்நிலையில் இதுகுறித்து ராஜீவ் குமார் கூறியபோது, ‘தற்போதைய பொருளாதார நெருக்கடியால் நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது ரிசர்வ் வங்கியின் கணிப்பு எதிர்பார்க்கப்பட்டதை விட குறைவாக உள்ளது. எனினும் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வரும் பொருளாதார மீட்பு நடவடிக்கையால் இந்தியா விரைவில் 8 சதவீத வளர்ச்சி கொண்ட நாடாக மாறும்’ என்று அவர் தெரிவித்தார்.

தற்போது ஆட்டோமொபைல் துறை கடும் நெருக்கடிக்கு உள் ளாகி இருக்கிற நிலையில், ரெப்போ விகிதக் குறைப்பு குறித்து இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தி யாளர்கள் சங்கத்தின் தலைவர் ராஜன் வதேரா கூறியபோது, ‘தற் போது பண்டிகைக்காலம் நெருங்கி வருகிற நிலையில் ரிசர்வ் வங்கி யின் வட்டி விகிதக் குறைப்பு மிக பயனுள்ளதாக அமையும். மக்க ளின் வாங்கும் திறனை இது ஊக்கு விக்கும். விளைவாக வாகன விற்பனை உயரும்’ என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

க்ரைம்

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

10 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்