சூப்பர் ரிச் சர்சார்ஜ் விலக்கல் எதிரொலி: மும்பை பங்குச் சந்தை 793 புள்ளி உயர்வு

By செய்திப்பிரிவு

மும்பை

பொருளாதாரத்தை முடுக்கிவிடும் நடவடிக்கையாக அந்நிய முதலீட் டாளர்களுக்கு (எஃப்பிஐ) விதிக்கப் படும் சூப்பர் ரிச் சர்சார்ஜ் விலக்கிக் கொள்ளப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து வாரத்தின் தொடக்க நாளான நேற்று பங்குச் சந்தை வர்த்தகம் விறுவிறுப் படைந்தது. ஒருகட்டத்தில் 1,052 புள்ளிகள் வரை உயர்ந்தது. வர்த் தக நேரம் முடிவடையும்போது 793 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டெண் 37,494 புள்ளிகளை எட்டியிருந்தது.

இதேபோல தேசிய பங்குச் சந்தையில் 228 புள்ளிகள் உயர்ந்த தில் குறியீட்டெண் 11 ஆயிரத்தைக் கடந்து 11,057 புள்ளிகளைத் தொட் டது. கடந்த மே மாதத்துக்குப் பிறகு நேற்றுதான் பங்குச் சந்தையில் இந்த அளவுக்கு ஏற்றம் பதிவாகி உள்ளது.

நேற்றைய வர்த்தகத்தில் விலை உயர்ந்த பங்குகள் பட்டி யலில் யெஸ் வங்கி முதலிடத்தில் உள்ளது. இதேபோல ஹெச்டி எஃப்சி, பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எல் அண்ட் டி, எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கி, கோடக் வங்கி பங்குகள் 5.24 சதவீத அளவுக்கு உயர்ந்தன. அதேசமயம் டாடா ஸ்டீல், சன் பார்மா, ஹீரோ மோட் டோகார்ப், வேதாந்தா, டாடா மோட் டார்ஸ், மாருதி சுஸுகி, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவன பங்கு கள் 2 சதவீதம் வரை சரிந்தன.

அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தகப் போர் மேலும் வலுக்கும்விதமாக அதிபர் ட்ரம்ப் பேசியது ஆசிய பங்குச் சந்தையை வெகுவாக பாதித்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

4 hours ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

க்ரைம்

6 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

க்ரைம்

7 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்