சென்னை
தங்கம் விலை இன்று பவுனுக்கு 640 ரூபாய் உயர்ந்து 29 ஆயிரத்து 440 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.
உலகளாவிய பொருளாதாரச் சூழலால் அமெரிக்க டாலரின் மதிப்பு குறையும் சூழல் உள்ளது. அமெரிக்கா- சீனா வர்த்தகப் பிரச்சினை பெரிய அளவில் உருவெடுத்து வருகிறது.
இதுபோலவே, ஈரான் - அமெரிக்கா இடையே நிலவி வரும் போர்ப் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதுமட்டுமின்றி சில ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக அளவில் பொதுவாக காணப்படும் வர்த்தகச் சுணக்கம் தற்போது ஏற்பட்டுள்ளது.
இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளனர். அரசுகள் மட்டுமின்றி பெரிய நிறுவனங்களும் தங்கள் முதலீட்டுக்கு பாதுகாப்பு கருதி தங்கத்தை வாங்குகின்றன.
இதன் காரணமாக தங்கம் விலை அண்மையில் உயர்ந்து வருகிறது. இதனால் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கணிசமாக உயர்ந்த வந்தது.
இந்த வாரத்தில் 29 ஆயிரம் ரூபாய் வரை தங்கம் விலை உயர்ந்தது. பின்னர் சற்று குறைந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு பவுனுக்கு( 8 கிராம்) 640 ரூபாய் உயர்ந்து ரூ. 29440-க்கு விற்கப்படுகிறது.
ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 80 ரூபாய் உயர்ந்து ரூ. 3,680-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து ரூ.49.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 mins ago
சினிமா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
வணிகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
க்ரைம்
4 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago
க்ரைம்
4 hours ago
இந்தியா
4 hours ago
சினிமா
6 hours ago
கருத்துப் பேழை
5 hours ago