காலாண்டு நஷ்டம் எதிரொலி; டிஹெச்எஃப்எல் பங்குகள் 30% சரிவு: 52 வாரங்களில் சந்தித்திராத வீழ்ச்சி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி

திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (டிஹெச்எஃப்எல்) நிறுவனத்தின் பங்குகள் நேற்று 30 சதவீத அளவுக்கு சரிந்தன. மார்ச் காலாண்டில் நிறுவனம் ரூ.2,224 கோடி நஷ்டத்தை சந்தித்ததாகச் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து பங்கு விலைகள் அதலபாதாளத்துக்குச் சரிந்தன. வர்த்தக முடிவில் ஒரு பங்கு விலை ரூ.48.50 என்ற விலைக்கு விற்பனையானது. வர்த்தகத்தின் இடையில் பங்கு விலை 32 சதவீதம் வரை சரிந்தது. இது இந்நிறுவனம் கடந்த 52 வாரங்களில் சந்தித் திராத சரிவாகும்.

தேசிய பங்குச் சந்தையில் இந்நிறுவன பங்குகள் 30 சதவீத அளவுக்கு சரிந்து ரூ.48.10 என்ற விலையில் வர்த்தகமாயின. மும்பை பங்குச் சந்தையில் 68 லட்சம் பங்குகளும், தேசிய பங்குச் சந்தையில் 7 கோடி பங்குகளும் வர்த்தகமாயின. நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.625 கோடி சரிந்து ரூ.1,522 கோடியானது.

மார்ச் காலாண்டில் நிறு வனம் ரூ.2,224 கோடி நஷ் டத்தை சந்தித்தது. ஆனால் முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் ரூ.134 கோடி லாபம் ஈட்டியது குறிப் பிடத்தக்கது.

இந்நிலையில், கடன் அளித்த வங்கிகள், நிறுவனங் களுக்கு எந்த பாதிப்பும் வரா மல் தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி சரி செய்யப் படும் என நிறுவனம் தெரிவித் துள்ளது. கடந்த ஆண்டு செப் டம்பர் வரை ரூ.41,800 கோடி கடன் தொகை திரும்ப அளிக்கப்பட்டுள்ளது. எஞ்சி யுள்ள கடன் தொகையை திரும்ப அளிப்பதற்காக நிறு வனங்களுடன் பேச்சு நடத்தி வருவதாக பங்குச் சந் தைக்கு அனுப்பிய கடிதத்தில் டிஹெச்எஃப்எல் குறிப்பிட்டுள் ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்