முடங்கிய பணிகள் முடுக்கி விடப்படும்: நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா கருத்து

By பிடிஐ

இதுவரை முடங்கிப் போயுள்ள 1,400 திட்டப் பணிகளை முடுக்கிவிடும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார். முடங்கிப்போயுள்ள திட்டப் பணிகளால் வங்கிகளின் கடன் சுமை அதிகரித்துள்ளது. இதைப் போக்குவதற்காக இப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்றார்.

நிலம் கையகப்படுத்துதல் விவகாரம், சுற்றுச்சூழல் பிரச்சினை உள்ளிட்டவற்றால் நின்று போயுள்ள திட்டப் பணிகளை மீண்டும் செயல்படுத்துவது குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எரிபொருள் சார்ந்த திட்டப் பணிகள் பெரும்பாலும் நிலக்கரி சுரங்கம் சார்ந்தது. இப்போது ரத்து செய்யப்பட்ட நிலக்கரி சுரங்கப் பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே இப்பணிகள் விரைவில் தொடங்கும் என்றார். அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை 8 சதவீதம் முதல் 10 சதவீத அளவுக்கு உயர்த்த நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக சின்ஹா குறிப்பிட்டார்.

இந்த ஆண்டும் பருவ மழை குறையும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதை எதிர்கொள்ள அரசு ஏதேனும் திட்டம் வைத்துள்ளதா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, சில சிக்கன நடவடிக்கை திட்டங்கள் அரசின் பரிசீலனையில் உள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

49 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்