வங்கிகள் கடன் வழங்கும் அளவு தொடர்ந்து அதிகரித்துள்ளது. பிப்ரவரி 20-ம் தேதி வரையான காலத்தில் (15 நாள்களில்) வங்கிகள் வழங்கிய கடன் அளவு ரூ. 64,53,394 கோடியாகும்.
முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கிகள் வழங்கிய கடன் அளவு ரூ. 58,45,833 கோடியாக இருந்தது. தற்போது 10.39 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளது.
பொது மக்களுக்கு வங்கிச் சேவை அதிகரிக்கச் செய்யவும், புதிய கணக்குகளைத் தொடங்கவும் அரசு முயற்சி எடுத்து வருவதால் சேமிப்பு அளவு 11.85 சதவீதம் அதிகரித்து ரூ. 84,74,824 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டு காலத்தில் சேமிப்பு அளவு ரூ. 75,76,609 கோடியாக இருந்தது.
முந்தைய மாதத்தில் வங்கிகள் வழங்கிய கடன் அளவு 10.38 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல சேமிப்பின் அளவு 11.77 சதவீதம் உயர்ந்துள்ளது.
கால வரையறையுடன் கூடிய சேமிப்புகள் ரூ. 77,05,748 கோடியாகும். இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் ரூ. 68,88,771 கோடியாக இருந்தது.
டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் வங்கிகளின் சேமிப்பு அளவு 10.9 சதவீத அளவுக்கும், வழங்கிய கடன் அளவு 10.1 சதவீத அளவுக்கும் அதிகமாக இருந்தது.
வழங்கிய கடன் மற்றும் திரட்டிய சேமிப்பில் பொதுத்துறை வங்கிகளின் பங்கு 73.3 சதவீதமாகும். தனியார் வங்கிகள் திரட்டிய சேமிப்பு 19.2 சதவீதமாகும்.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
18 mins ago
தமிழகம்
8 mins ago
சினிமா
16 mins ago
தமிழகம்
38 mins ago
க்ரைம்
54 mins ago
தமிழகம்
58 mins ago
இந்தியா
39 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
க்ரைம்
2 hours ago
தமிழகம்
1 hour ago