ஆசிய கட்டுமான மேம்பாட்டு வங்கியில் (ஏஐஐபி) இணைய ரஷ்யா ஒப்புதல் தெரிவித்தி ருக்கிறது. இந்த தகவலை ரஷ்யாவின் துணைப் பிரதமர் ஷுவலோவ் தெரிவித்தார். சீனாவில் நடந்த மாநாட்டில் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் ஆசியா கட்டுமான மேம்பாட்டு வங்கியில் இணைவதற்கு ஒப்புதல் தெரிவித்ததாக சீனாவில் நடந்த மாநாட்டில் துணைபிரதமர் தெரிவித்தார். ஆசியாவில் கட்டு மானத்திட்டங்களுக்கு நிதி உதவி செய்வதற்காக உருவாக் கப்பட்டது. ஆசிய பிராந்தியத்தில் வளர்ச்சி மற்றும் சமூக மேம் பாட்டுத்திட்டங்களை நிறை வேற்றுவதற்காக இந்த வங்கி தொடங்கப்பட்டது. வரும் 2020-ம் ஆண்டு ஆசியா வில் கட்டுமான பணிகள் மேற்கொள்வதற்கு 73,000 கோடி டாலர் தேவைப்படும் என்று ஆசிய மேம்பாட்டு வங்கி (ஏடிபி) கணித்திருக்கிறது.
ஆனால் இதற்கு போதுமான அளவுக்கு நிதியை உலக வங்கி அல்லது ஆசிய மேம்பாட்டு வங்கியால் பூர்த்தி செய்ய முடியாது என்பதால் இந்த புதிய வங்கி தொடங்கப்பட்டது. 2014-ம் ஆண்டே இந்தியா இந்த வங்கியில் உறுப்பினராக இணைந்து விட்டது.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
11 mins ago
இந்தியா
31 mins ago
தமிழகம்
54 mins ago
உலகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
2 hours ago
க்ரைம்
2 hours ago
தமிழகம்
2 hours ago