பொதுத்துறை நிறுவனமான கொச்சின் ஷிப்யார்ட் நிறுவனத்தின் பொதுபங்கு வெளியீட்டுக்கு (ஐபிஓ) முதலீட்டாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த ஐபிஓவுக்கு விண்ணப்பிக்க கடைசி நாளான நேற்று 76 மடங்கு அளவுக்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன .
இந்த ஐபிஓ மூலம் ரூ.1,468 கோடி திரட்ட நிறுவனம் முடிவெடுத்திருக்கிறது. இதற்காக 3.39 கோடி பங்குகளை நிறுவனம் வெளியிடுகிறது. ஆனால் 258 கோடி பங்குகளுக்கு விண்ணப்பங்கள் வந்தன.
நிறுவன முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளுக்கு 63 மடங்கு விண்ணப்பங்கள் வந்தன. அதேபோல சிறுமுதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளுக்கு 8.28 மடங்குக்கு விண்ணப்பங்கள் குவிந்திருக்கின்றன.
புதன்கிழமை முடிவில் 3.16 மடங்குக்கு மட்டுமே விண்ணப்பங்கள் வந்தன. ஆனால் கடைசி நாளான நேற்று முதலீட்டாளர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. ஒரு பங்குக்கு ரூ.424 -ரூ.432 என விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக் கிறது.
முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 30 பங்குகள் அல்லது அதன் மடங்குகளில் விண்ணப்பிக்க வேண்டும். சிறு முதலீட்டாளர் மற்றும் பணியாளர்களுக்கு ரூ.21 தள்ளுபடியில் பங்குகள் வழங்கப் படும்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
10 hours ago
சினிமா
11 hours ago
இந்தியா
12 hours ago
தமிழகம்
12 hours ago