சுந்தர் பிச்சைக்கு பதவி உயர்வு

By பிடிஐ

கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் ஒருவராக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ஆல்ஃபபெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி லாரி பேஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரது முயற்சியால் கூகுள் நிறுவனம் சிறப்பாக இயங்கி வருகிறது. மேலும் நிறுவனத்தில் புதிய முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. ஆல்ஃபபெட் நிறுவனத்தில் அவரோடு இணைந்து பணியாற்றுவதை ஆவலோடு எதிர்பார்த்து உள்ளேன். இவ்வாறு லாரி பேஜ் தெரிவித்துள்ளார்.

இந்த நியமனம் கடந்த 19-ம் தேதியிலிருந்து நடமுறைக்கு வந்துள்ளது என்று ஆல்ஃப்பெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் தொடர்ந்து கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் சுந்தர் பிச்சை செயல் படுவார் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்