பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளராக தபன் ராய் நியமனம்

By செய்திப்பிரிவு

பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளராக இருக்கும் சக்திகாந்த தாஸ் பதவி காலம் வரும் 31-ம் தேதி யுடன் முடிவடைகிறது. இதனை அடுத்து இந்த பொறுப்புக்கு தபன் ராய் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். தற்போது நிறுவன விவகார செயலாளராக இருக்கும் இவர், வரும் ஜூன் 1-ம் தேதி புதிய பொறுப்பினை ஏற்கிறார்.

கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சக்திகாந்த தாஸ் இந்த பொறுப்பில் இருந்துவருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் இவரது பதவி காலம் முடிவதாக இருந்தது. பட்ஜெட் காலம் என்பதால், அவரது பதவி காலம் மே மாதம் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

தபன் ராய் குஜராத் பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி (1982-ம் ஆண்டு பிரிவு) ஆவார். 1984 முதல் 1994 வரை குஜராத்தில் பல முக்கிய பொறுப்புகளில் இருந்தவர். மத்திய அரசில் மின்சாரம், டெக்ஸ்டைல் உள்ளிட்ட பல பிரிவுகளில் பணியாற்றியவர். 2015-ம் ஆண்டு நிறுவன விவகார பிரிவு செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

5 mins ago

சினிமா

12 mins ago

விளையாட்டு

35 mins ago

வணிகம்

47 mins ago

இந்தியா

49 mins ago

சினிமா

55 mins ago

ஓடிடி களம்

1 hour ago

கல்வி

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

மேலும்