பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளராக இருக்கும் சக்திகாந்த தாஸ் பதவி காலம் வரும் 31-ம் தேதி யுடன் முடிவடைகிறது. இதனை அடுத்து இந்த பொறுப்புக்கு தபன் ராய் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். தற்போது நிறுவன விவகார செயலாளராக இருக்கும் இவர், வரும் ஜூன் 1-ம் தேதி புதிய பொறுப்பினை ஏற்கிறார்.
கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சக்திகாந்த தாஸ் இந்த பொறுப்பில் இருந்துவருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் இவரது பதவி காலம் முடிவதாக இருந்தது. பட்ஜெட் காலம் என்பதால், அவரது பதவி காலம் மே மாதம் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
தபன் ராய் குஜராத் பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி (1982-ம் ஆண்டு பிரிவு) ஆவார். 1984 முதல் 1994 வரை குஜராத்தில் பல முக்கிய பொறுப்புகளில் இருந்தவர். மத்திய அரசில் மின்சாரம், டெக்ஸ்டைல் உள்ளிட்ட பல பிரிவுகளில் பணியாற்றியவர். 2015-ம் ஆண்டு நிறுவன விவகார பிரிவு செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
5 mins ago
சினிமா
12 mins ago
விளையாட்டு
35 mins ago
வணிகம்
47 mins ago
இந்தியா
49 mins ago
சினிமா
55 mins ago
ஓடிடி களம்
1 hour ago
கல்வி
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
1 hour ago