பாஜக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து இது வரை அந்நிய நேரடி முதலீடு 42 சதவீதம் உயர்ந்திருக்கிறது. அந்நிய முதலீட்டை உயர்த்துவதற்காக 17 துறைகளில் விதிமுறைகள் தளர்த்தப்பட்டிருக்கிறது என்று வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மேலும் கூறும்போது, சர்வதேச அளவில் அந்நிய நேரடி முதலீடு 16 சதவீதம் சரிந்திருக்கும் சூழ்நிலை யில் இந்தியாவில் அந்நிய முதலீடு தொடர்கிறது. கடந்த 2015-16-ம் ஆண்டில் அதிக அந்நிய முதலீடு இந்தியாவுக்கு வந்துள்ளது.
இந்த நிதி ஆண்டில் 29 சதவீதம் உயர்ந்து 4,000 கோடி டாலர் வந்துள்ளது. முந்தைய நிதி ஆண்டில் 3,093 கோடி டாலர் அந்நிய முதலீடு வந்தது. கடந்த 2000-01-ம் ஆண்டிலிருந்து அதிக அந்நிய முதலீடு வந்திருப்பது கடந்த நிதி ஆண்டில்தான் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
45 mins ago
இந்தியா
3 hours ago
வலைஞர் பக்கம்
3 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
4 hours ago
இந்தியா
4 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
4 hours ago
இந்தியா
5 hours ago
ஜோதிடம்
5 hours ago