ஐடியா செல்லுலார் மற்றும் வோடபோன் நிறுவனங்களின் இணைப்பு வெற்றிகரமாக முடிந் துள்ளது. இதன்மூலம் 40.8 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட நாட்டின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு சேவை நிறுவனமாக வோடபோன் ஐடியா நிறுவனம் மாறியுள்ளது.
வோடபோன் ஐடியா லிமிடெட் டின் புதிய இயக்குநர் குழு 12 இயக்குநர்களைக் கொண்டுள் ளது. குமார் மங்கலம் பிர்லா இதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை செயல் அதிகாரியாக பாலேஷ் ஷர்மா நியமிக்கப்பட் டுள்ளார். இந்திய தொலைத் தொடர்பு வருவாய் சந்தை மதிப்பில் 32.2 சதவீதத்தை வோடபோன் ஐடியா கொண்டுள்ளது. வோட போன் மற்றும் ஐடியா ஆகிய இரண்டு பிராண்ட்களும் தொடர்ந்து இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வோட போன் - ஐடியா இணைப்பின் மூலம் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்த தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனம், அதிக வருவாய் சந்தை மதிப்பு கொண்டிருந்த நிறுவனம் போன்ற பெருமைகளை ஏர்டெல் நிறுவனம் இழந்துள்ளது.
இந்த இணைப்பின் மூலம் பிராட் பேண்ட் சேவையில் நாட்டின் முன் னணி நிறுவனமாக வோடபோன் ஐடியா மாறும் என வோடபோன் ஐடியா தலைவர் குமார் மங்கலம் பிர்லா தெரிவித்துள்ளார். இந்தியா வின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனத்தை உருவாக்கி யுள்ளதாகவும், சில்லறை மற்றும் தொழில்துறை என இருவகை யிலான சேவைகளையும் சிறப்பாக வழங்குவோம் என இணைப்பு குறித்து கருத்து தெரிவித்த வோடபோன் ஐடியா தலைமை செயல் அதிகாரி பாலேஷ் ஷர்மா கூறினார். இந்திய தொலைத் தொடர்பு வருவாய் சந்தை மதிப்பில் 32.2 சதவீதத்தை வோடபோன் ஐடியா கொண்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
இந்தியா
19 mins ago
வணிகம்
20 mins ago
உலகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
28 mins ago
தமிழகம்
1 hour ago
ஓடிடி களம்
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
க்ரைம்
2 hours ago
சினிமா
2 hours ago