தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை நிர்வகிக்கும் இபிஎப்ஓ அலுவலகம் சிறப்பு கார்ப்பரேட் அலுவலகத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளது.
பெரிய நிறுவனங்கள் மற்றும் அதன் ஊழியர்களுக்கு உடனடி சேவையளிப்பதற்காக இந்த அலுவலகம் தொடங்கப்பட உள்ளது. இந்த சிறப்பு அலுவலகம் மும்பையில் பாந்த்ரா பகுதியில் நவம்பர் 1-ம் தேதி முதல் செயல்படும் என இபிஎப் அலுவலகம் அறிவித்துள்ளது. மேம்பட்ட சேவை, உடனடி தீர்வு மற்றும் காகிதம் இல்லாத அலுவலகம் என்ற அடிப்படையில் இந்த அலுவலகம் செயல்படும் என்று இபிஎப் அதிகாரி தெரிவித்தார்.
ஒவ்வொரு மண்டல அலுவலகத்திலும் இதுபோன்ற சிறப்பு கார்ப்பரேட் அலுவலகத்தை (எஸ்சிஓ) தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இபிஎப்ஓ –வில் மொத்தம் ரூ. 6 லட்சம் கோடி நிதியம் உள்ளது. ஆண்டுக்கு ரூ. 70 ஆயிரம் கோடி தொகை தொழிலாளர்களின் வைப்பு நிதியாக இதில் சேமிக்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
33 mins ago
கருத்துப் பேழை
29 mins ago
சுற்றுலா
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
ஓடிடி களம்
13 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago