புத்தாண்டு சலுகையாக ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.399 ரீசார்ஜுக்கு 100 சதவீத கேஷ்பேக்கை அறிவித்துள்ளது. இந்த ஆஃபர் ஏற்கெனவே இருப்பவர்களுக்கும் புதிய வாடிக்கையாளர்களுக்குப் பொருந்தும்.
இந்த புதிய ஆஃபர் டிசம்பர் 28, 2018-ல் இருந்து ஜனவரி 31, 2019 வரை அமலில் இருக்கும். இந்த கேஷ்பேக், ஜியோவின் ஃபேஷன் இணையதளமான 'ஏஜியோ' கூப்பனாகக் கிடைக்கும். இந்தக் கூப்பனை ஏஜியோ ஆஃபர்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்தக் கூப்பன், 'மைஜியோ' செயலியின் 'மைகூப்பன்ஸ்' பகுதியில் இருக்கும். இதைக் கொண்டு 'ஏஜியோ' செயலி அல்லது இணையதளத்தில் குறைந்தபட்சம் ரூ.1000க்குப் பொருட்கள் வாங்கும்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஏஜியோ கூப்பனை மார்ச் 15-ம் தேதிக்கு முன்னாள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆன்லைன் மூலமாகவோ ஜியோ விற்பனையாளர்கள் மூலமாகவோ இந்த புத்தாண்டு ஆஃபரைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் ஜியோ நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 21.50 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்நிலையில் தற்போது ஜியோ அறிவித்துள்ள ரூ.399 கேஷ்பேக், தொலைத்தொடர்பு நிறுவன வரலாற்றில் அதிகபட்சத் தொகையாகக் கருதப்படுகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
சினிமா
3 hours ago
இந்தியா
4 hours ago
வணிகம்
12 hours ago
சுற்றுச்சூழல்
5 hours ago
சுற்றுலா
5 hours ago
கல்வி
4 hours ago