உலக நாடுகளில் தொழில் புரிவதற்கு உகந்த சூழல் நிலவும் நாடுகள் பட்டியலில் இந்தியா அடுத்த 3 ஆண்டுகளில் 25 இடங்களுக்குள் முன்னேறும் என்று நிதி ஆயோக் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் நம்பிக்கை தெரிவித்தார்.
ஆண்டுதோறும் உலக வங்கி வெளியிடும் தொழில் புரிய ஏதுவான நாடுகள் பட்டியில் இந்தியா 77-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அடுத்த ஆண்டில் இந்தியா 50 இடங்களுக்குள் முன்னேறும் என்று அவர் குறிப்பிட்டார்.
எந்த ஒருநாடும் இவ்வளவு குறுகிய காலத்திற்குள் 23 இடங்கள் முன்னேறியிருக்க முடியாது. மூன்றுஆண்டுகளில் 65 இடங்கள் இந்தியா முன்னேறியுள்ளது என்ற அவர் 5 ஆண்டுகளில் 50 இடங்களுக்குள் இந்தியா முன்னேற வேண்டும் என்பதே பிரதமரின் இலக்கு என்று குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு உலக வங்கிவெளியிட்ட பட்டியலில் இந்தியா100-வது இடத்தில் இருந்தது. அரசின் செயல்பாடுகளை எதிர்க்கட்சிகள் பொதுத்தேர்தலை உத்தேசித்து கடுமையாக எதிர்த்துவரும் சூழலில் தொழில் தொடங்கஉகந்த சூழல் நிலவும் நாடுகள் பட்டியலில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
10 mins ago
விளையாட்டு
5 mins ago
இணைப்பிதழ்கள்
31 mins ago
தமிழகம்
41 mins ago
இணைப்பிதழ்கள்
58 mins ago
இணைப்பிதழ்கள்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
கருத்துப் பேழை
2 hours ago
தமிழகம்
2 hours ago