எஸ்பிஐ நஷ்டம் ரூ.4,876 கோடி 

By செய்திப்பிரிவு

நாட்டின் பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ), 2018-19 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ரூ.4,875.75 கோடி நஷ்டம் அடைந்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது காலாண் டாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நஷ்டம் அடைந்துவருவது குறிப் பிடத்தக்கது. கடந்த நிதியாண் டின் நான்காம் காலாண்டில் ரூ. 7,718 கோடியும், மூன்றாம் காலாண்டில் ரூ.2,416 கோடியும் நஷ்டம் அடைந்திருந்ததாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்திருந்தது. கடந்த நிதி யாண்டின் முதல் காலாண்டில் இந்த வங்கி ரூ.2,005 கோடி லாபம் ஈட்டியிருந்தது.

இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ரூ.65,492 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.62,911 கோடி மட்டுமே ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வருவாய் ஈட்டியிருந்தது.

கடந்த காலாண்டில் 10.91 சதவீதமாக இருந்த வங்கியின் மொத்த வாராக்கடன் இந்தக் காலாண்டில் 10.69 சதவீதமாக குறைந்துள்ளது. வங்கியின் நிகர வாராக்கடன் கடந்த காலாண்டின் 5.73 சதவீதம் என்பதில் இருந்து 5.29 சதவீத மாக குறைந்துள்ளது.

தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயம் (என்சிஎல்டி) ஒப்பு தல் வழங்கியுள்ள சீரமைப்பு திட்டங்களுக்காக முதல் காலாண்டில் ரூ.1,952 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வும், இருப்பினும் இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு தேசிய நிறுவனங்கள் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் (என்சிஎல்ஏடி) வசம் நிலுவை யில் உள்ளதாகவும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.

காலாண்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பங்குகள் சரிவைச் சந்தித்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

30 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

மேலும்