பங்குச்சந்தைகள் மேலும் உயர்வு

By செய்திப்பிரிவு

தொடர்ந்து ஆறாவது வர்த்தக தினமாக பங்குச்சந்தைகள் உயர்ந்து முடிந்தன. வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 30 புள்ளிகள் உயர்ந்து 26421 புள்ளிகளில் முடிவடைந்தது. நிப்டி 23 புள்ளிகள் உயர்ந்து 7898 புள்ளிகளில் முடிவடைந்தது. ஆனால் வர்த்தகத்தின் இடையே பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன.

சென்செக்ஸ் 26531 புள்ளிகளையும், நிப்டி 7919 புள்ளி களையும் வர்த்தகத்தின் இடையே தொட்டன. கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி, திங்கள் கிழமை அமெரிக்க சந்தைகள் உயர்ந்தது ஆகிய காரணங்களால் செவ்வாய்க் கிழமை இந்திய பங்குச்சந்தைகள் உயர்ந்து முடி வடைந்தன.

திங்கள் கிழமை வர்த்தகத்தில் இந்திய நிறுவன முதலீட்டாளர்கள் 490 கோடி ரூபாயும், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் 473 கோடி ரூபாயும் பங்குச்சந்தை முதலீடு செய்தார்கள். ஆட்டோ துறையை சேர்ந்த நிறுவனங்கள் உயர்ந்து முடிவ டைந்தன. டாடா மோட்டார்ஸ், எம் அண்ட் எம் மற்றும் மாருதி சுசூகி ஆகிய நிறுவனங்கள் தன்னுடைய 52 வார உச்சபட்ச விலையை தொட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

இந்தியா

11 mins ago

இந்தியா

18 mins ago

தமிழகம்

11 mins ago

இந்தியா

29 mins ago

க்ரைம்

46 mins ago

இந்தியா

56 mins ago

விளையாட்டு

45 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

மேலும்