சென்னையில் 17 மாதங் களுக்கு பிறகு நேற்று தங்கம் ஒரு பவுன் ரூ.24 ஆயிரமாக உயர்ந்தது.
சர்வதேச அளவில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை அதிகரித்து வருவதால், உள்ளூரிலும் தங்கம் விலை அதிகரித்து வருகிறது. சென்னையில் 22 கேரட் கொண்ட தங்கம் நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.104 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.24,040 ஆக உயர்ந்துள்ளது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.13 அதிகரித்து, ரூ.3 ஆயிரத்து 5-க்கு விற்பனை ஆனது. இதுவே, புதன்கிழமை ரூ.2,992-க்கு விற்கப்பட்டது. தங்கம் விலை ரூ.24 ஆயிரத்தை எட்டி இருப்பது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடைசியாக கடந்த 2016-ம் ஆண்டு நவம்பரில் ஒரு பவுன் விலை ரூ.24 ஆயிரத்தை தாண்டியது. அப்போது ஒரு கிராம் ரூ.3,023 ஆக உயர்ந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.24,184 ஆக இருந்தது. 17 மாதங்களுக்கு பிறகு தற்போது ரூ.24 ஆயிரத்தை கடந்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
56 mins ago
விளையாட்டு
1 hour ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
க்ரைம்
3 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago
க்ரைம்
4 hours ago
இந்தியா
4 hours ago
சினிமா
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
சுற்றுலா
5 hours ago