இரண்டு மாதங்களுக்கு பின் ஜிஎஸ்டி வரி வசூல் உயர்வு

By செய்திப்பிரிவு

 

ஜிஎஸ்டி வரி வசூல் கடந்த அக்டோபர், நவம்பர் ஆகிய இரண்டு மாதங்களாக குறைந்து வந்த நிலையில், டிசம்பரில் 86,703 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, கடந்த ஆண்டு செப்டம்பரில் 92,150 கோடி ரூபாய் அளவிற்கு வசூலானது. ஆனால் அதன் பின், அடுத்த இரண்டு மாதங்களுக்கு அடுத்தடுத்து வரி வசூல் சரிந்தது.

அக்டோபர் மாதத்தில் 83,000 கோடி ரூபாயாகவும், நவம்பரில் 80,808 கோடி ரூபாயாகவும் வரி வசூல் குறைந்தது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் வரி வசூல் 86,703 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜனவரி 24ம் தேதி வரை மொத்தம் ஒரு கோடி வணிகர்கள் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்துள்ளதாகவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

க்ரைம்

21 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

45 mins ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

மேலும்