கடந்த வாரத்தில் முக்கிய 5 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.94,689 கோடி உயர்ந்தது. சந்தை மதிப்பு அடிப்படையில் முதல் பத்து இடங்களில் இருக்கும் நிறுவனங்களில் எஸ்பிஐ, ரிலையன்ஸ், மாருதி, ஓஎன்ஜிசி மற்றும் இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனங்களின் சந்தை மதிப்பு உயர்ந்தது. மாறாக டிசிஎஸ், ஹெச்டிஎப்சி வங்கி, ஹெச்டிஎப்சி, ஐடிசி மற்றும் ஹெச்யூஎல் ஆகிய நிறுவனங்களின் சந்தை மதிப்பு சரிந்தது.
எஸ்பிஐ ரூ.57,619 கோடி உயர்வு
குறிப்பாக எஸ்பிஐ பங்கின் சந்தை மதிப்பு அதிகமாக உயர்ந்தது. கடந்த வாரத்தில் மட்டும் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.57,619 கோடி உயர்ந்தது. பொதுத்துறை வங்கிகளில் மூலதனத்தை மத்திய அரசு உயர்த்தும் என்னும் செய்தியால் இந்த பங்கு புதன்கிழமை மட்டும் 27 சதவீதம் உயர்ந்தது.
ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.11,999 கோடியும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.9,964 கோடியும், மாருதி சுசூகியின் சந்தை மதிப்பு ரூ.9,823 கோடியும் மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.5,283 கோடியும் உயர்ந்து முடிந்தன.
ஆனால் ஹெச்டிஎப்சி வங்கியின் சந்தை மதிப்பு ரூ.19,767 கோடி சரிவை கண்டது. இதனைத் தொடர்ந்து ஹெச்டிஎப்சி சந்தை மதிப்பு ரூ.8,717 கோடியும், டிசிஎஸ் சந்தை மதிப்பு ரூ.1,885 கோடியும், ஹெச்யூஎல் சந்தை மதிப்பு ரூ.1,471 கோடியும் மற்றும் ஐடிசி நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.1,218 கோடியும் சரிந்தன.
சந்தை மதிப்பு அடிப்படையில் ரிலையன்ஸ் முதல் இடத்தில் இருக்கிறது. கடந்த வாரம் சென்செக்ஸ் 767 புள்ளிகள் உயர்ந்து முடிந்தன.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 mins ago
இந்தியா
17 mins ago
க்ரைம்
34 mins ago
இந்தியா
44 mins ago
விளையாட்டு
33 mins ago
இந்தியா
49 mins ago
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
தொழில்நுட்பம்
9 hours ago
விளையாட்டு
10 hours ago
சினிமா
10 hours ago