மழையினால் தொகுப்பு வீடு இடிந்து விபத்து; பெண் உயிரிழப்பு: இருவர் படுகாயம்

By வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை பெய்த பலத்த மழையினால் திருவையாறு அருகே தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், தூங்கி கொண்டிருந்த பெண் அதே இடத்தில் உடல் நசுங்கி இறந்தார்.

திருவையாறு அருகே மருவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவரது மகள் தேவகி (45). மருமகன் சுப்பிரமணி. இவர்கள் மூவரும் அப்பகுதியில் உள்ள தொகுப்பு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை (ஜூன் 23) சுமார் 2 மணிக்கு தொடங்கி, 4 மணி வரை பரவலாக மழை பெய்தது.

அப்போது பெய்த மழையால், கல்யாணசுந்தரத்தின் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில், தேவகி சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும், தேவகியின் கணவர் சுப்பிரமணி, தேவகியின் தந்தை கல்யாணசுந்தரம் இருவரும் பலத்த காயமடைந்தனர்.

தேவகி: கோப்புப்படம்

இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் காயமடைந்த இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து, தகவலறிந்த மருவூர் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் இடிபாட்டில் சிக்கிய தேவகியின் உடலை மீட்டனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 mins ago

சினிமா

20 mins ago

இந்தியா

1 hour ago

வர்த்தக உலகம்

1 hour ago

ஆன்மிகம்

26 mins ago

இந்தியா

36 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

மேலும்