பிரான்சில் 4 முதல் 5 வராங்களில்கரோனா நிலைமை கட்டுக்குள் வரும் என்று அந்நாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிரான்ஸ் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ பிரன்ஸில் கரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. 4 முதல் 5 வாரங்களில் கரோனா பாதிப்புகள் நிலைமை கட்டுக்குள் வரும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனாவைத் தடுக்க பிரான்ஸ் அரசு தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. பிப்ரவரி மாதம் முடிவதற்குள் 40 லட்சம் பேர் கரோனா தடுப்பு மருந்தைப் பெற்றிருப்பார்கள் என்றும் பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
உருமாறிய கரோனா வைரஸ்
பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவியது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தின. சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் பிரான்ஸில் கரோனா தொற்று தற்போது கட்டுக்குள் உள்ளது.
ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை கரோனா வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
உலகம் முழுவதும் 11 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 25 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
35 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
தமிழகம்
1 hour ago