புதுச்சேரியில் புதிதாக 31 பேருக்கு கரோனா தொற்று: உயிரிழப்பு இல்லை

By அ.முன்னடியான்

புதுச்சேரியில் இன்று புதிதாக 31 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் உயிரிழப்பு ஏற்படவில்லை.

இதுகுறித்து சுகாதாரத்துறை செயலர் அருண் இன்று(ஜன 20) தெரிவித்திருப்பதாவது, ‘‘புதுச்சேரி மாநிலத்தில் இன்று 3,679 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி – 24, காரைக்கால் - 2, மாஹே – 5 என மொத்தம் 31 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஏனாமில் புதிதாக யாரும் தொற்றால் பாதிக்கப்படவில்லை. மேலும், இன்றைய தினம் உயிரிழப்பு எதுவுமில்லை.

இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 643 ஆகவும், இறப்பு விகிதம் 1.66 ஆகவும் உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 38 ஆயிரத்து 737 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் 127 பேர், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் 169 என மொத்தம் 296 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று 32 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 798 (97.58 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை 5 லட்சத்து 42 ஆயிரத்து 508 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 4 லட்சத்து 99 ஆயிரத்து 330 பரிசோதனைகள் ‘நெகடிவ்’ என்று முடிவு வந்துள்ளது’’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

45 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்