சுனித் குமார் சட்டர்ஜி 10

By ராஜலட்சுமி சிவலிங்கம்

இந்திய மொழியியல் அறிஞர்

உலகப் புகழ்பெற்ற பன்மொழி மொழியியல் அறிஞரும் கல்வியாளருமான சுனித் குமார் சட்டர்ஜி (Suniti Kumar Chatterji) பிறந்த தினம் இன்று (நவம்பர் 26). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* கல்கத்தாவில் ஹாவ்டா நகரில் ஷிவ்பூர் என்ற கிராமத்தில் பிறந்தார் (1890). தந்தை சமஸ்கிருத அறிஞர். 1907-ல் மோதிலால் சீலின் இலவசப் பள்ளியிலும், ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியிலும் பயின்றார். 1911-ல் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டமும் 1913-ல் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

* கல்கத்தா வித்யாசாகர் கல்லூரியில் விரிவுரையாளராகத் தன் தொழில் வாழ்வைத் தொடங்கினார். கல்கத்தா பல்கலைக்கழகத்தில் 1914-ல் துணைப் பேராசிரியராகச் சேர்ந்தார். 1919-ல் லண்டன் பல்கலைக்கழகத்தில் ஒலிப்பியல் படிப்பிலும் (phonetics), டி.லிட்.டிலும் டிப்ளமோ பட்டங்கள் பெற்றார். பின்னர், லண்டனில் ஒலியியல், இந்தோ - ஐரோப்பிய மொழியியல் கல்வியோடு, பிராகிருதம், பாரசீகம், பண்டைய அயர்லாந்து மொழி, ஜெர்மனியின் பண்டைய மொழி கோதிக் மற்றும் பல மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார்.

* பாரீஸ் சென்று சோர்போன் பல்கலைக்கழகத்தில் இந்தோ - ஆரிய, இந்தோ - ஐரோப்பிய மொழியியல், கிரேக்கம் மற்றும் லத்தீன் மொழிகள் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். 1922-ல் இந்தியா திரும்பிய இவர், கல்கத்தா பல்கலைக்கழகத்தில் மொழியியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.

* மலேயா சுமித்திரா, ஜாவா மற்றும் பாலி ஆகிய இடங்களுக்கு ரவீந்திரநாத் தாகூருடன் பயணம் மேற்கொண்ட இவர், அங்கெல் லாம் இந்தியக் கலை, கலாச்சாரம் குறித்து விரைவுரைகள் ஆற்றி னார். இந்தப் பயண அனுபவம் குறித்து நூல் எழுதியுள்ளார்..

* கல்கத்தா பல்கலைக்கழகம் சார்பில் லண்டனில் ஒலியியல் விஞ்ஞானம் பற்றிய சர்வதேச மாநாட்டிலும் ஆசியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் நடைபெற்ற மொழியியல் மாநாடுகளிலும் பங்கேற்றார். இந்திய அரசு இவரை சமஸ்கிருதக் கழகத்தின் தலைவராக நியமித்தது.

* ஆங்கிலத்தில் 30, வங்க மொழியில் 22, இந்தியில் 7 நூல்களை எழுதியுள்ளார். இவற்றைத் தவிர நூற்றுக்கணக்கான மொழி ஆய்வுக் கட்டுரைகளையும் பல சமஸ்கிருதக் கவிதைகளையும் எழுதியுள்ளார்.

‘ஆரிஜின் அன்ட் டெவலப்மன்ட் ஆஃப் தி பெங்காலி லாங்குவேஜ்’ என்ற இவரது நூல் மாணவர்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றது. ‘பெங்காலி ஃபொனடிக் ரீடர்’, ‘இன்தோ-ஆர்யன் அன்ட் ஹிந்தி’, ‘ராமாயணா: இட்ஸ் கேரக்ட்டர்ஸ்’, ‘ஜெனசிஸ் அன்ட் எக்சோடஸ்: ஏ ரெஸ்யூம்’, ‘லாங்குவேஜஸ் அன்ட் லிட்டரேசர்ஸ் ஆஃப் மாடர்ன் இந்தியா’ உள்ளிட்ட நூல்கள் பிரபலமடைந்தன.

* கிழக்கு வங்க சட்டசபையின் சபாநாயகராக 1952 முதல் 1958 வரை செயல்பட்டார். 1969-ல் சாகித்ய அகாடமியின் தலைவராகவும், கல்வி, அறிவியல், மொழி தொடர்பாக ஐரோப்பா, ஆசியா அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள அமைப்புகளில் கவுரவ உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார்.

* 1952-ம் ஆண்டில் பணி ஓய்வு பெற்றார். உலகம் முழுவதும் பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கின. சமஸ்கிருதப் புலமைக்காக ‘பிரேம்சந்த் ராய்சந்த் ஸ்டூடன்ட்ஷிப்’ விருது கிடைத்தது. ராயல் ஏஷியாடிக் சொசைட்டியின் ஃபெலோவாக நியமிக்கப்பட்டார்.

* சாகித்ய வாசஸ்பதி பட்டம், ‘இந்தியாவின் தேசிய ஆசிரியர்’ என்ற கவுரவம், பத்மபூஷண், பத்மவிபூஷண் உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும் கவுரவங்களும் பெற்றார். மொழியியல் அறிஞர், கல்வியாளர், இலக்கியவாதி என பன்முகத் திறன் கொண்ட சுனித் குமார் சட்டர்ஜி, 1977-ம் ஆண்டு 87-வது வயதில் மறைந்தார்.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 mins ago

சுற்றுலா

35 mins ago

சினிமா

40 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்